பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 24 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் மே 23 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
கோடை விடுமுறை:
பீகாரில் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மே 23 முதல் ஜூன் 14 வரை மூடப்படும் என்றும் மே 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மே 21ம் தேதியான இன்று வரை மட்டுமே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தை மாவட்ட நிர்வாகம் முன்னதாக குறைத்தது. இதனால், மாநிலத்தின் கடும் வெயிலில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை.
Exams Daily Mobile App Download
தனியார் பள்ளிகள் தற்போது விடுமுறை அளிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் விருப்பம் போல் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாடத்திட்டம் முடிக்கப்படாததால், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாடத்திட்டம் முடிந்த பின்னரே விடுமுறை அளிக்கப்படும். வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையிலும் சரியான நேரத்தில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும், இல்லையென்றால் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறுகின்றன.
மத்திய அரசின் NAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
பீகாரில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளின் நேரம் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. பீகாரில் பல மாவட்டங்களில் காலை 10.45 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தேவை ஏற்பட்டால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படலாம் என்று கல்வி அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல் விடுமுறை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.