1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
புதுச்சேரி மாநில அரசு 2021-22 கல்வியாண்டுக்கான பள்ளிகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு அறிவிப்பு:
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து கொரோனா மூன்றாவது அலை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தீவிரமடைய தொடங்கியது. இதனால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இதை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் மாநிலத்தில் இந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு கால தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை குறித்து புதுச்சேரி கல்வித்துறை முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தகுதி பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 3ம் தேதி வரை விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
இதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய அறிவித்துள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 30 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும், பதவி உயர்வுக்கான விதிமுறைகளின் படி தயார் செய்து, அந்தந்த ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு, மாநில அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி அமர்வுக்கான கடைசி தேதி ஏப்ரல் 29 எனவும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி வேலை நாள் மே 30 மற்றும் 12 ஆம் வகுப்பு மே 28 எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.