ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 15ம் தேதி வரை முன்னதாக கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 30ம் தேதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை – கொரோனா பரவல் எதிரொலி!
இதனை தொடர்ந்து பல மாநில கல்வி வாரியங்களும் மாணவர்களின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது. ஹரியானா மாநில கல்வி வாரியமும் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. இதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவுகள் நிர்ணயிப்பது தொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு 3 லட்சம் 10ம் வகுப்பு மாணவர்களின் இறுதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா அச்சம் நிலவி வருவதால் முன்னதாக ஜூன் 15ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது, ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.