தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6ம் தேதி முதல் தேர்வு தொடங்க உள்ளது.
தென்மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சேவையில் திடீர் மாற்றம்! முழு விபரம் இதோ!
மற்ற வகுப்பை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மே மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10,11,12ம் வகுப்புகளை தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வுகளுக்கான தேர்வு கூட அனுமதி சீட்டு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 13ம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.