தமிழகத்தில் தொடர்ந்து வரும் பள்ளி மாணவ & மாணவிகளின் தற்கொலைகள் – அச்சத்தில் பெற்றோர்கள்!

0
தமிழகத்தில் தொடர்ந்து வரும் பள்ளி மாணவ & மாணவிகளின் தற்கொலைகள் - அச்சத்தில் பெற்றோர்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து வரும் பள்ளி மாணவ & மாணவிகளின் தற்கொலைகள் - அச்சத்தில் பெற்றோர்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து வரும் பள்ளி மாணவ & மாணவிகளின் தற்கொலைகள் – அச்சத்தில் பெற்றோர்கள்!

கள்ளக்குறிச்சி சோக சம்பவத்திலிருந்து மீள முடியாமல் உள்ள இந்த சூழலில், திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் தற்கொலைகள்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி ஸ்ரீமதி பிளஸ் -2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந் தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது.

தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!

இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும் ஸ்ரீமதி இறந்து 10 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவிக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளுவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா, 17 நேற்று முன் தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Exams Daily Mobile App Download

மேலும் காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கள்ளக்குறிச்சி தற்கொலை சம்பவம், தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், பிளஸ் 2 மாணவி சரளா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பதைத் தடுப்பது குறித்து அமைச்சர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதாவது “மாணவிகளுக்கு பள்ளியில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை யாரிடமும் சொல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு ஆலோசனை ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் ’மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டிகள் வகுப்பறையில் வைக்கப்பட்டு தங்கள் புகார்களை அதில் தெரிவிக்கலாம். அதிலும் தெரிவிக்க முடியாத மாணவச் செல்வங்களுக்கு என தனி வெப்சைட் விரைவில் துவங்கப்படும். அந்த வெப்சைட்டில் தங்களால் சொல்ல முடியாத சம்பவங்களையும் பள்ளியில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளையும் பதிவு செய்யலாம்” என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!