திடீரென மயங்கிய முல்லை – கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
திடீரென மயங்கிய முல்லை - கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
திடீரென மயங்கிய முல்லை - கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!
திடீரென மயங்கிய முல்லை – கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

பரிகாரம் செய்தாவது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பரிகாரம் செய்யும் முல்லை திடீரென மயங்கி விழுகிறார். மயங்கி விழுந்ததால் இது கர்ப்பமாக இருக்குமோ என கதிர் சந்தேகப்படும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முல்லை – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தார்கள் அனைவரும் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். ஆனால் மீனா அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை முல்லைக்கு மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனக்கூறி சண்டை போடுகிறார். இதற்கு பிறகு எப்படி செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். மீனா பேசியதை நினைத்து முல்லையும் மிகவும் வருத்தப்பட்டார்.

கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

இதற்குப் பிறகு முல்லையிடம் ஒருவர் நீ குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறுகிறார். பின்பு முல்லை பரிகாரம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பரிகாரம் செய்கிறார். முல்லை பரிகாரம் செய்வது குடும்பத்தில் உள்ள எவருக்கும் பிடிக்கவே இல்லை. இதனால் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் பரிகாரம் செய்ய செல்கிறார். பின்பு முல்லை பரிகாரம் செய்து கொண்டிருக்கும் விஷயம் கதிருக்கு தெரிந்து கதிர் கோவிலுக்கு சென்று முல்லையை வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு வந்ததும் முல்லை மயங்கி விழுகிறார். ஒருவேளை முல்லை கர்ப்பமாக இருப்பாரோ என கதிர் சந்தேகப்படும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!