தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களின் IAS அதிகாரிகள் திடீர் இடமாற்றம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்குவது வழக்கம். அதே போல தற்போது 6 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திடீர் இடமாற்றம் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.
பணியிட மாற்றம்
தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, டால்ரிங், மீன்பிடி மற்றும் மீனவர் நலன் துறையில் பணியாற்றி வந்த டி.எஸ். ஜவகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த கே. மணிவாசன் பொதுப்பணித்துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ், முதன்மைச் செயலாளர், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை (IAMWARM) மற்றும் அரசு முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த திரு மங்கத் ராம் சர்மா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
TNPSC போட்டி தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு – நாளை (ஆக. 6) ஆன்லைன் மாதிரி தேர்வு!
இதனையடுத்து, அரசு முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையில் பணியாற்றி வந்த திரு ஏ.கார்த்திக் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக செயலாளராக இருந்து வந்த ஆனந்த் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.