தேசிய திறனாய்வு தேர்வு திடீரென நிறுத்தம் – NCERT வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகம் ஒப்புதல் வழங்காத நிலையில் NCERT இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வு:
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் (MOE) நிதியளிக்கப்பட்ட, மத்திய துறை திட்டமான தேசிய திறனாய்வு திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நடத்தப்படும் இந்த திட்டத்தில் 8 ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு நடத்தும், தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் 8 ஆம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,250 உதவித்தொகையும், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். பிஎச்டி மாணவர்களுக்கு யுஜிசி விதிகளின்படி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட மத்திய துறையின் இந்த திட்டத்தை, மார்ச் 31, 2021 வரை மட்டுமே செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த விதிமுறைகள் கட்டாயம் – அதிரடி அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உத்தரவு வரும் வரை தேசிய திறனாய்வு தேர்வினை நிறுத்தி வைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து மறுஉத்தரவு வரும் வரை இந்த தேர்வுகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உதவித்தொகை பெற முடியாமல் மாணவர்கள் சிரமத்தில் இருக்கின்றனர். விரைவில் இந்த தேர்விற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்