திடீரென கர்ப்பமாகும் முல்லை, பரிகாரத்தின் பலனா? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை குழந்தை வரம் வேண்டி கோவிலில் கடினமான பரிகாரம் செய்திருக்கிறார். இந்நிலையில் அதன் காரணமாக முல்லை கர்ப்பமாக இருக்கிறார். அதெல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. முல்லை கதிருக்கு குழந்தை பிறக்குமா என பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இயற்கையான முறையில் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர் சொல்லிவிடுகிறார். ஆனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தப்பட்டு இருக்கின்றன்ர். நிறைய செலவானாலும் பரவாயில்லை என்பதால் மூர்த்தி தனம் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடிவு செய்கின்றனர்.
ஆனால் பணம் இப்போதைக்கு இல்லை என்பதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணத்தேவை அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் இவ்வளவு பணம் செலவு பண்ணி பணக்கஷ்டம் வேண்டாம் என்பதால் முல்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்கும் என நினைக்கிறார். ஆனால் அது கடினமான பரிகாரம் என்பதால் முல்லையின் அம்மா மற்றும் கதிர் செய்ய வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் முல்லை கேட்காமல் அவர்களுக்கு தெரியாமல் பரிகாரம் செய்கிறார்.
சன் டிவி “கயல்” சீரியல் செய்த சாதனை – பரிதாப நிலையில் பாரதி கண்ணம்மா! குவியும் வாழ்த்துக்கள்!
கஷ்டப்பட்டு பரிகாரம் செய்வதை பார்த்து கதிர் தனம் முல்லை குடும்பத்தினர் மிகவும் வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் கஷ்டப்பட்டு பரிகாரத்தை நல்ல படியாக முடிந்த முல்லை விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறார். அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போக கதிர் அவரை பார்த்துக் கொள்கிறார். அப்போது மருத்துவமனைக்கு செல்ல முல்லை கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் சொல்ல போகிறார். இதனால் குடும்பத்தில் சந்தோசம் வர இருக்கிறது.