தமிழகத்தில் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு – காரணம் இது தான்!

0
தமிழகத்தில் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு - காரணம் இது தான்!
தமிழகத்தில் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு - காரணம் இது தான்!
தமிழகத்தில் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு – காரணம் இது தான்!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்:

தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பிக்க நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்புறங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. அதன்படி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

மேலும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்துள்ளார். 36 வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் – அடுக்கடுக்கான முறைகேடுகள்!

இவர் இரவு தூங்க சென்று நெடுநேரம் ஆகியும் காலை அறையை விட்டு வெளியே வரவில்லை சந்தேகம் அடைந்து அறையில் சென்று பார்த்த போது இறந்த நிலையில் இருந்தார். ஜானகிராமனின் திடீர் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார். 36 வது வார்டில் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!