திடீரென அதிகரித்த தங்கம் விலை.. ஷாக்கில் நகைப்பிரியர்கள் – சவரன் ரூ.37,400க்கு விற்பனை!
நாட்டின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை கண்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று (22-09-2022) மாலையில் தங்கம் விலையானது அதிகரித்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை:
பிரிக்க முடியாத இரு விஷயம் என்றால் அது பெண்ணும் பொன்னும் தான். என்ன தான் தங்கம் விலை அதிகரித்தாலும் பெண்களுக்கு தங்க நகைகள் மீது இருக்கும் மோகம் குறையாமல் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலும், தங்க நகைக்கடைகள் எதுவும் நஷ்டம் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு தங்கம் மீது மக்களுக்கு ஆசை இருந்தாலும் ஒரு பக்கம் அது பணத்தை முதலீடு செய்வதில் சிறந்த முதலீடாக இருக்கிறது.
அதனால் கூட பலர் தங்கம் வாங்குகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் தங்க நகைகளை வாங்க இப்போது இருந்தே மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல நகைக்கடைகளும் புது புது டிசைன்களை அறிமுகம் செய்து தீபாவளி ஸ்பெஷல் என விளம்பரம் செய்து வருகிறது. இந்நிலையில் தினசரி தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. நேற்று வரை தங்கம் விலையானது குறைவாக இருந்த நிலையில் தமிழக மக்கள் குஷியில் இருந்தனர்.
தமிழக அரசு பள்ளிகளின் அவல நிலை.. 5,583 பள்ளி கட்டிடங்கள் இடிப்பு ? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்றைய (22-09-2022) மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,675க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.63 விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்