தமிழகத்தில் திடீரென நில அதிர்வு – அதிர்ச்சியில் பொது மக்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் இந்த வேளையில் திடீரென வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நில அதிர்வு:
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை ஒட்டி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிவிட்டதா? அப்போ கட்டாயம் இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள தரைக்காடு பகுதியில் இன்று பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த பொதுமக்கள் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நில அதிர்வு குறித்து ஆராய்ந்தனர். கடந்த ஆண்டும் இதே நவம்பர் மாதத்தில் இது போன்று நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.