குழந்தை இல்லாத விரக்தியில் முல்லை எடுத்த திடீர் முடிவு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கர்ப்பமாகிவிடுவோம் என ஆசையாக இருக்க ஆனால் அது எல்லாம் கனவாகவே முடிந்துவிட்டது. அதனால் முல்லை பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அதாவது அவர் கதிருக்கு இன்னொரு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது முல்லை கதிர் பற்றியே கதை கொண்டு செல்லப்படுகிறது. முல்லை குழந்தை வேண்டும் என ஆசையாக இருக்க ஆனால் குழந்தை பிறக்காது என டாக்டர் சொல்லிவிடுகிறார். அதனால் மனம் உடைந்த முல்லை வருத்தப்பட கூடாது என்பதற்காக மூர்த்தி பல இடங்களில் கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய பணம் கொடுக்கிறார். கடன் வாங்கியது தெரிய வர கதிர் அதை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் முல்லைக்கு நல்ல படியாக டிரீட்மென்ட் முடிந்து எல்லாம் நல்லபடியாக இருப்பதாக டாக்டர் சொல்கிறார். இன்னும் 2 வாரங்களில் கரு வந்துவிடும் என டாக்டர் சொல்ல குடும்பமே சந்தோசத்தில் இருக்கிறார்கள். முல்லை எனக்கு இப்பவே பாப்பா வயிற்றில் இருப்பது போல சொல்ல, பெண் குழந்தை பிறந்தால் தனலட்சுமி என பெயர் வைக்கலாம் என பேசிக் கொள்கின்றனர். குழந்தை வருவதற்கு முன்னர் இப்படி பேசுவதை நினைத்து கதிர் வருத்தப்படுகிறார்.
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
ஆனால் கதிர் பயந்தது போல எல்லாம் நடந்துவிட்டது. முல்லைக்கு வயிறு வலி வந்து கரு இல்லை என டாக்டர் சொல்லிவிடுகிறார். அதை நினைத்து முல்லை மிகவும் வருத்தப்படுகிறார். அனைவரும் ஆறுதல் சொன்னாலும் முல்லை அதை கேட்பதில்லை. அதனால் முல்லை பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அதாவது கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அதெல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.