குழந்தை இல்லாததால் கதிர் எடுக்கும் திடீர் முடிவு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்றைய எபிசோடில் பெரிய சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது முல்லைக்கு கரு தாங்காமல் போய்விட்டது. அதனால் மன வருத்தமாக இருக்கும் கதிர் முல்லை குழந்தை விஷயத்தில் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சென்ற வாரம் வரை சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் குடும்பத்தில் அனைவரும் இருந்தனர். ஆனால் இப்போது முல்லையின் கனவு எல்லாம் முடிந்துவிட்டது. முல்லையின் அம்மா குழந்தை வந்துவிட்டது போல பேசிய போது கதிர் வருத்தப்பட்டார். ஆனால் இப்போது அது போலவே நடந்துவிட்டது. இன்றைய எபிசோடில் முல்லைக்கு லேசாக வயிறு வலிக்கிறது. ஆனால் அதை பெரிது படுத்தாமல் முல்லை இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
முல்லைக்கு வலி இருப்பதை பார்த்து தனம் மருத்துவமனைக்கு போகலாம் என சொல்கிறார். முல்லை சரி என சொல்ல இருவரும் கிளம்ப அங்கே பரிசோதனை செய்துவிட்டு முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக டாக்டர் சொல்கிறார். அதனால் முல்லை வருத்தப்படுகிறார். அவர் வீட்டிற்கு வர எல்லாரும் தைரியம் சொல்கின்றனர். ஆனால் முல்லையால் சமாதானம் ஆக முடியவில்லை. முல்லை இனிமேல் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மனம் வெறுத்து பேசுகிறார்.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!
அதனால் கதிர் பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அதை குடும்பத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதாவது கதிர் முல்லை குழந்தை வேண்டும் என ஆசைப்படுவதால் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். குடும்பத்தை விட முல்லை இதற்கு சம்மதிப்பாரா என்பது எல்லாம் இனி வரும் வாரங்களில் வர இருக்கிறது.