5G இணைய சேவையில் இப்படி ஒரு பிளான் இருக்கா – இரண்டே ஆண்டுகளில் மாறப்போகும் இந்தியா!
தற்போது செயல்பாட்டில் இருக்கும் 4ஜி சேவையின் வேகத்தை விட பல மடங்கு அதிக வேகத்தில் செயல்படும் 5ஜி சேவை நாடு முழுவதும் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை:
உலகின் முன்னணி நாடுகளில் உள்ளது போல் தொழில்நுட்ப வசதிகளை இந்தியாவில் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் 5ஜி இணைய சேவைக்கான ஒத்திகை நடத்தப்பட்டு, தற்போது ஸ்பெக்ட்ரம் ஏலம் முழுவதுமாக நிறைவடைந்து, இன்னும் சில நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் 4ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர், 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். அதில், 5ஜி சேவைக்காக 35 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய அரசின் உதவித்தொகை.. விண்ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் – பெறுவது எப்படி?
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த 8 நாட்டில் இணைய சேவை அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், உட்புற கிராமங்களில் கூட ஃபைபர் இணைப்புகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாடு முழுவதும் 5ஜி சேவை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்