செயற்கை முறை சிகிச்சையில் வெற்றி பெறும் முல்லை – வளைகாப்பை நடத்தும் குடும்பத்தினர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என்று எதிர்பார்த்த சமயத்தில் முல்லை சிகிச்சையில் வெற்றி பெறுவது போன்றும், முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும், முல்லைக்கு குடும்பத்தினர்கள் வளைகாப்பு நடத்துவது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு இந்த வாரத்திலிருந்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற இருப்பதால் நிச்சயமாக இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க குடும்பத்தினர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
ஆனால், செயற்கை முறை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் வரை செலவாகும் என்பதால் அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என குடும்பத்தினர்கள் யோசிக்கிறார்கள். பின்பு, மூர்த்தி தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறுகிறார். அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை முல்லைக்காக மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என மீனா கூறி சண்டை போடுகிறார். பின்பு, எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள்.
ஆனால் இந்த சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படியாவது சிகிச்சை வெற்றி பெற்றே தீர வேண்டும் என வேண்டி இருக்கின்றனர். இந்நிலையில் முல்லைக்கு சிகிச்சை வெற்றியை கொடுப்பது போலவும், முல்லை கர்ப்பமாவது போன்றும், முல்லைக்கு குடும்பத்தினர்கள் வளைகாப்பு நடத்துவது போன்றும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.