வேலை தேடும் இளைஞர்களுக்கு குட்நியூஸ் – நிறுவனங்களுக்கான மானிய சலுகை நீட்டிப்பு!
மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் இணைந்தால் வேலை, சம்பளம், PF உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
மானிய சலுகை நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் நிறுவனங்களின் வேலை செய்யும் பணியாளர்களுக்கு 50% சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் சில பணியாளர்களுக்கு பணி இழப்பும் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை நிலவி வந்தது. இந்நிலையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் மூலம் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது.
தமிழகத்தில் பிப்.19 (சனிக்கிழமை) பொது விடுமுறை – எந்தந்த பகுதிகளுக்கு தெரியுமா? முழு விபரம் இதோ!
தற்போது வேலைவாய்ப்புயின்மை பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக மத்திய அரசு தரப்பிலிருந்து ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது. இந்த திட்டத்தின் மூலம் வேலை இல்லாமல் அவதிபடுபவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு இத்திட்டத்தில் இணைவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் ஆத்மநிர்பார் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி 2022 மார்ச் 31 ஆகும்.
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் – இனி புற்று நோய்க்கும் இலவச சிகிச்சை!
இந்த திட்டத்தின் படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அரசு சார்பில் அளிக்கப்படும். இந்த மானியம் ஓய்வூதியப் பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதன்படி EPFO திட்டத்தில், பணியாளர்கள் பங்களிப்பாக 12%, நிறுவனத்தின் பங்களிப்பாக 12% என 24% ஆனது 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.15,000 க்கு குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே PF கணக்கில் அரசு செலுத்தும் தொகை வழங்கப்படும். மேலும் 1,000 பேருக்கு மேல் பணியாளர்கள் இருக்கும் நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் பலன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.