LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் கிடைக்கவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்த பயனாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எப்படி மானியம் கிடைத்ததை சரி பார்க்கலாம் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர்:
உலகம் முழுவதுமே வீட்டு பயன்பாடு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் ஆகிய இரண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்தபடியே தான் இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை முறையாக திருத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நான்கு முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. சிலிண்டர் காஸின் விலை மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் போன்ற அனைத்து எரிவாயுக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – பெற்றோருக்கு ஷாக் நியூஸ்!
கேஸ் எரிவாயுவின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பல கோடி கணக்கான ஏழை பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்திலிருந்தே எல்பிஜி சிலிண்டர் பயனாளர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு ரூ.200 வரைக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
சிலருக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.72.57 மட்டுமே மானியம் கொடுத்ததாகவும், சிலருக்கு ரூ.158.52 அல்லது ரூ.237.78 என்கிற கணக்கில் மானியம் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அவரவர் வங்கி கணக்கிலே சென்று எவ்வளவு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்து கொள்ளலாம். எவ்வளவு மானியம் கிடைத்துள்ளது என்பதை பார்க்க அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்வையிடவும். பின்பு, கேஸ் சிலிண்டர் படத்தின் மீது கிளிக் செய்து சேவை வழங்குநர் விவரம் என்கிற பகுதிக்குள் சென்று மானியம் குறித்த தகவலை அறிந்துகொள்ளலாம்.