தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு, மானியத்தொகை வழங்கல் – அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 15ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
மானியத்தொகை:
தமிழகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பிறகு 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. நோய் பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றது. இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இந்த தேதிக்குள் பணம் கிடைக்கும்? விதியில் பெரிய மாற்றம்!
இதனையடுத்து மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அதனை தொடர்ந்து பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அரசு சார்பாக ஆண்டுதோறும் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2021-2022ம் கல்வியாண்டிற்கான மானியத் தொகையை மார்ச் 4-க்குள் வழங்கி அதனை மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார். எனவே மானியம் வழங்கும் முன்பாக பள்ளிகளில் உள்ள பணியிடங்கள், அதில் பயிலும் மாணவர் விவரம் ஆகியவற்றை சரிபார்த்து அதற்கேற்றவாறு மானியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.