தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் அடுத்தடுத்து முறைகேடு – பொதுமக்கள் அதிருப்தி!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தமிழக அரசின் கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்க நகைக்கடன்களில் 5 சவரன் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்த தள்ளுபடிக்கான அரசாணையை அரசு வெளியிட்டது. இந்நிலையில், தள்ளிப்படி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்தது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA பற்றிய அறிவிப்பு – 7வது சம்பள கமிஷன் அப்டேட்!
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் தகுதியவர்களுக்கு மற்றும் தேவையுடையவர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர உறுதி செய்வதற்காக தான் நிபந்தனைகளை விதித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
அதில், மக்கள் அடகு வைத்த நகை வேறு, தள்ளுபடி வழங்கப்பட்டதால் திருப்பி வழங்கப்படும் நகை வேறாக உள்ளது. கூட்டுறவு சங்கத்தில் உள்ள நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைத்துள்ளனர். இதனால் தான் குளறு படி நடத்துள்ளதாகவும், ஒரே நபருக்கு நான்கு கடன் தள்ளுபடி என்றும், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவருக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது விசாரணைக்கு வந்த அதிகாரிகள் கூட்டுறவு கடன் சங்கத்தினருக்கே ஆதரவாக உள்ளதாகவும் பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் புகார் அளித்துள்ளனர்.