சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா – கூடுதல் பேருந்துகள் இயக்கம்..மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் சிரமம் இல்லாமல் மீண்டும் வீடு திரும்பினர். அதனை தொடர்ந்து தற்போது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐப்பசி அமாவாசைக்கு பிறகு பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவர். இந்த கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சூரகாம்சர நிகழ்வை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.
இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் – 30 நாட்களில் புகார்களுக்கு தீர்வு!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் (அக்.30) நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக திருச்செந்தூரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், நாகர்கோவில், தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் 170 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.