புதிய சிபிஐ இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் – மத்திய அரசு நியமனம்!
புதிய சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிபிஐ இயக்குநர்:
சிபிஐ இயக்குநர் பதவி கடந்த 4 மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பணியிடத்தை நிரப்பும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதுரி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
23,000 பேர் புதிதாக பணி நியமனம் – பிளிப்கார்ட் நிறுவனம் நடவடிக்கை!!
அந்த பட்டியலில் வி.எஸ்.கே.கவுமுதி, சுபோத் குமார் ஜெய்ஸ்வால், குமார் ராஜேஷ் சந்திரா ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த மூவரில் யார் நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய சிபிஐ இயக்குநர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போத் குமார் ஜெய்ஸ்வால் இதற்கு முன் மகாராஷ்டிர காவல்துறை டிஜிபியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.