இந்தியாவில் டிவி சேனல்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய ஒளிபரப்பு துறையின் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் டி.வி சேனல்கள் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு உள்ளடக்க விவரங்களை மார்ச் 1 முதல் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டிவி சேனல்கள்:
இந்தியாவில் டிவி சேனல்கள் மத்திய ஒளிபரப்பு துறையில் கீழ் இயங்கி வருகிறது. பெரும்பாலான டிவி சேனல்கள் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய ஒளிபரப்பு துறை இந்திய டிவி சேனல்கள் உள்நாட்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை நாள்தோறும் 30 நிமிடம் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கல்வி மற்றும் இலக்கியம், விவசாயம், கலாச்சாரம், ஒருமைப்பாடு போன்றவைகள் குறித்த வீடியோக்களை சிறு சிறு பகுதிகளாக ஒளிபரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வயது வரம்பில் தளர்வு? பெற்றோர்கள் கோரிக்கை!
மேற்கண்ட வீடியோக்கள் ஒளிபரப்ப பட்டதற்கான அறிக்கையை சேவை ஒளிபரப்பு இணையதளத்தில் மாதந்தோறும் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இந்த விழிப்புணர்வு வீடியோக்களை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ஒளிபரப்ப கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தொலைக்காட்சி சேனல்கள் தினமும் ஒளிபரப்பும் பொது சேவை உள்ளடக்கத்தின் விவரங்களை மார்ச் 1 முதல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.