இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் – ஆய்வில் அறிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை உருவாக சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், ஒவ்வொரு நாடும் வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மத்திய, மாநில அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.
SBI வங்கியில் சேமிப்பு கணக்கு ஆன்லைனில் துவக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) சார்பில் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி கொரோனா மூன்றாம் அலை ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஆகஸ்ட் மாதத்தில் உச்சம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் தற்போது மீண்டும் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் போது மூன்றாம் அலை உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் முதல் மற்றும் இரண்டாம் அலையை போல இல்லாமல் மூன்றாம் அலையில் குறைவான பாதிப்பே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த மூன்றாவது அலையில் குறைந்தது ஒரு லட்சம் அல்லது அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.