தமிழக அஞ்சல் துறையில் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2022 – மே 17 கடைசி நாள்!
அஞ்சலக ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மே 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பும்படி தபால் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அஞ்சல்துறை வேலைவாய்ப்பு:
இந்திய அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட மிக பழமையான தபால் தலை காப்பீட்டு திட்டம் தான் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமாகும். அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கான பணியிடங்களை இந்திய அஞ்சல் துறை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய வங்கிகள் காப்பீட்டு முகவர் பணிக்கான விண்ணப்பங்களை கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்ச்சியில் தேர்வில் வெற்றி பெற்ற வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்வோர், முன்னாள் ஆலோசகர்கள், ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்காடி மற்றும் மண்டல பயனாளர்கள் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய வங்கிகள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
மேலும், பாலிசியில் பிரீமியம் அடிப்படையில் பணிக்கு தேர்வானவர்களுக்கு கமிஷனும் வழங்கப்படும். தேர்வாகும் தேர்வாளர்களுக்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகில் உள்ள அலுவலகங்களில் பின்னர் செலுத்த வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அருகே உள்ள அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 17ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், இது குறித்த விவரங்களை அறிய விரும்பினால் 04632-220368, 04636- 222313 இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.