குழந்தைகள் மீது டெல்டா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!
குழந்தைகள் மத்தியில் டெல்டா வைரஸ் நோயின் தாக்கம் குறித்து ஆய்வு ஒன்றை அமெரிக்க நோய் தடுப்பு மையம் மேற்கொண்டு, ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
டெல்டா வைரஸ்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயின் 3ம் அலை குழந்தைகளையே அதிக அளவில் பாதிக்கும் என்றும், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் குழந்தைகளுக்கான கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகள் மீது டெல்டா வைரஸ் தாக்குதல் பாதிப்பு குறித்து ஆய்வுகளை அமெரிக்க நோய் தடுப்பு மையம் மேற்கொண்டு வந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து தொடர்ந்து அழுத்தம் – மதுரை எம்.பி. வெங்கடேசன்!
ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 0-17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலேயே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும் குழந்தை நல மருத்துவமனைகளில் அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி குழந்தைகள் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாக தீவிர பாதிப்புக்குள்ளாகவில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்த டெல்டா வைரஸ்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான அனுமதி கிடைப்பின் கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை எளிதில் பாதுகாக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.