தமிழகத்தில் கூடுதல் காப்பு வைப்பு தொகை குறித்த ஆய்வு – மின்வாரியம் உத்தரவு!
தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியம்:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது ஆலையின் தீவிரம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக மின் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படும் கூடுதல் காப்பு வைப்பு தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கூடுதல் காப்பு வைப்பு தொகையானது, புதிய மின் இணைப்பு வழங்கும் போது மின் நுகர்வோரிடம் இருந்து மின் வாரியம் வசூலிக்கும் தொகையாகும்.
தமிழக அரசின் நெசவுத்தொழில் டிப்ளமோ படிப்பு – ஜூலை 12 வரை விண்ணப்பம்!
மின் பயன்பாட்டை பொறுத்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தொகை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி மின் இணைப்பு பெறும் போது தெரிவித்திருந்த அளவை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள வட்டியை மின்வாரியம் வழங்குகிறது. அதே சமயத்தில் மின் பயன்பாடு குறைந்திருந்தால் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூடுதல் காப்பு வைப்பு தொகை குறித்த ஆய்வு நடத்த அனைத்து மின் பகிர்மான வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரின் காப்பு வைப்பு தொகை, தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதால் மீதமுள்ள தொகையை வசூலிக்கவும் அதிகமான தொகை இருந்தால் அதை சரிகட்டல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,