தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயமாம்!

0
தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - 'இது' கட்டாயமாம்!
தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - 'இது' கட்டாயமாம்!
தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயமாம்!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அது குறித்த முழு விவரத்தையும் கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பொது தேர்வுகள்:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் பொது தேர்வுகளுக்கான தேதிகளும் தெரிவிக்கப்பட்டு மாணவர்களும் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதன் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10 வகுப்பு பொது தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொது தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்து இருந்தார். மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நடப்பு(மே ) மாதம் இறுதி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் – காரணம் தெரியுமா? ரசிகர்கள் குஷி!

இந்த நிலையில் தற்போது பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும், ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறியிருந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!