தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் – ஷாக் ரிப்போர்ட்!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் - ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் - ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் – ஷாக் ரிப்போர்ட்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் சில மாணவர்கள் தொடர் விடுமுறை எடுப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளை மீண்டும் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவி முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு – ஹிஜாப் சம்பவம்!

தற்போது சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தாமல் வழக்கம் போல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாக மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 மாணவர்கள் அதிகம் விடுப்பு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த தகவலை அறிந்த பள்ளிக்கல்வித்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்தது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளது. அத்துடன் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. அதனால் பெற்றோர்கள் தயக்கம் காட்டாமல் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!