தமிழகத்தில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழி கற்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் தற்போது இருமொழிக் கொள்கை அமலில் உள்ள நிலையில், மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சர்:
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் நடைமுறை தொடங்கிவிட்டது. இந்த புதிய கல்வி கொள்கையை பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இதனால் அடித்தட்டு மக்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், மேலும் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்றும் பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் பிரதமர் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்விற்காக தான் இந்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி வந்தார். மேலும், மாணவர்களுக்கு 5,8,10 மற்றும் 12 ஆகிய நான்கு வகுப்புகளிலும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பிற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!
இருந்தபோதிலும் தற்போது தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருந்து வருகிறது. இதற்கான ஒப்புதல் குறித்து தமிழக ஆளுநரிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் , டெல்லி தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் விழாவில் பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம் – அரசு அறிவிப்பு!!
அப்போது, தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது. பெரியார் கண்ட கனவு நிறைவேறி வருகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள இருமொழிக் கொள்கையையே தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேநேரம் மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். ஆனால் மூன்றாவது மொழி கற்க கட்டாயப்படுத்த கூடாது. சர்வதேச அளவில் ஆங்கிலமும், மாநில அளவில் தமிழும் உள்ளது என்று கூறியுள்ளார்.