தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். தற்போது இது தொடர்பாக ஆசிரியர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன. மேலும் மாணவர்கள் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவை நேரடி வகுப்புகளில் தரும் பலனை தரவில்லை.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு, பள்ளிகள் திறப்பு தேதி குறித்து எப்போது அறிவிக்கும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவலாக காத்து வருகின்றனர். தற்போது ஆசிரியர்கள் இது குறித்து கூறியதாவது, தமிழகத்தில் தற்போது மாணவர்கள் சேர்க்கை தொடங்கியிருப்பது அனைவர்க்கும் புத்துயிர் அளித்துள்ளது.
பள்ளிகளுக்கு வந்து பெற்றோர்கள் இலவச பாட புத்தகங்களை வாங்கி செல்வது சற்று நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அமர வைப்பது சவாலான ஒன்று. விடுமுறை நாட்களை எண்ணி காத்திருந்த மாணவர்கள் தற்போது பள்ளி திறப்பு நாட்கள் குறித்து எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் நன்கு படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் கூட பின்தங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பள்ளிகள் திறக்கப்பட்டால் தான் நன்மை என்று உணர்ந்த பெற்றோர்கள், மாணவர் சேர்க்கையில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டால் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பிணைப்பு இருக்கும். இதனால் மாணவர்கள் கல்வி திறன் குறித்து ஒருவருக்கும் அச்ச நிலை ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.