JEE Mains 2023 தேர்வு: ஜனவரி மாதத்திற்கு பதில் ஏப்ரல் மாதம் நடைபெறுமா? மாணவர்களின் கோரிக்கை!!
IIT, NIT, IISc உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர JEE நுழைவு தேர்வு ஜனவரி 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதே சமயத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளும் நடைபெறுவதால் மாணவர்கள் JEE Mains தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
JEE தேர்வு:
இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் மாணவர்கள் சேர JEE தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதும். இந்த ஆண்டுக்கான (2023) தேர்வை 2021, 2022ம் ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம்.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் நடப்பு ஆண்டுக்கான தேர்வானது ஜனவரி 24 முதல் 31ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அத்துடன் நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
H1B விசாவிற்கு செக் வைக்கும் அமெரிக்க அரசு – ஐடி நிறுவனங்கள் பாதிப்பு!
அதனால் மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பிறகு JEE Mains தேர்வை நடத்துமாறு கோரிக்கை எழுப்பியுள்ளனர். அதாவது ஜனவரி மாதம் நடைபெறும் JEE Mains 2023 தேர்வினை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும் JEE Mains 2023 தேர்வினை மே மாதத்திற்கும் தள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.