தேர்வுக்கான வினாக்களை மாணவர்களே தயார் செய்யலாம் – ஐஐடி புது முயற்சி!!
கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெறுவதில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவதற்கு புதிய வழிமுறையை கோவா ஐஐடி கையாண்டுள்ளது.
கோவா ஐஐடி:
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது கோவா ஐஐடி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் புதிய முறையை கையாண்டுள்ளது. அதன்படி 100 மதிப்பெண்களுக்கு வழங்கும் வினாத்தாள்களை இரண்டு பகுதிகளாக பிரித்து அதில் 60 மதிப்பெண்களுக்கான கேள்விகளை மாணவர்கள் தாங்களே தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. தாங்கள் தயாரிக்கும் கேள்வியின் மூலம் உங்கள் புரிதலை பிரதிபளிக்க வேண்டும் என்றும் அறிவித்தது.
மே 30க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? மாநில அரசு ஆலோசனை!!
இரண்டாவது பகுதியான 40 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தாங்கள் தயாரித்த கேள்விகளுக்கு தாங்களே பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்கள் பாடங்களில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதனை அறியவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக தேர்வினை எழுத வேண்டும் என்பதற்காகவும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.