‘ஆன்லைன் கேம், அடிமையாகும் மாணவர்கள்’ – மத்திய கல்வி அமைச்சகம் பரபர சுற்றறிக்கை!
நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாகி வரும் நிலையில் அவர்களின் நலன் கருதி மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம்:
கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால் மொபைல் போன் பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மொபைலில் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் மாணவர்கள் அதிகமாக அடிமையாவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
பொதுத்துறை வங்கிகளில் 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு – தனியாரில் தாராளம்!
சமீபத்தில் பப்ஜி விளையாட்டில் மாணவர்கள் அடிமையானதால் அதனை தடை செய்த பிறகு பல உயிரிழப்புகள் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் மொபைல் போன்களில் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை அனுமதிக்க கூடாது. மாணவர்கள் நேரடியாக விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் மாணவர்கள் மொபைல் போனில் விளையாடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
தொடர்ச்சியாக ஆன்லைன் வழியிலான விளையாட்டுகளை விளையாடும் போது உடல் மற்றும் மனதளவில். ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடையே பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.