தமிழக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – கல்விக்கடன் ஆவணங்கள்!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் தங்கள் உயர் கல்விக்கான கல்வி கடன் பெறுவதற்கான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்விக்கடன்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நிதிச்சுமை காரணமாக தங்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் பயனடையும் வகையில் வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உரிய சான்றிதழ் இல்லாமலும் வங்கி ஊழியரின் அலட்சியம் காரணமாகவும் சில மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் செலவு ரூ.744 கோடி – அரசாணை வெளியீடு!
இந்த நிலையை மாற்றுவதற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 படித்த தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் வங்கிகள் மூலம் எந்த ஒரு சிரமமும் இன்றி கல்விக்கடனை பெறுவதற்கு சிறப்பு உதவி மையம் ஒன்று அமைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் கல்விக் கடனுக்கு தேவைப்படும் மாணவர்கள் சமர்பிக்க வேண்டிய சான்றுகள் குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட சான்றிதழ்களை முன்கூட்டிய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தங்கள் உயர்கல்விக்கு கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வருகின்றனர்.