அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் – கூடுதல் சலுகைகளை வழங்க அரசு ஏற்பாடு!
புதுவையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. மேலும், புதுவையில் உள்ள கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்க இருக்கிறது. புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதால் கூடுதலான பல சலுகைகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது, அரசு பள்ளிகளிலேயே சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் ஆங்கில வழி கல்வி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள், ஆங்கிலவழிக் கல்வி போன்ற முறைகள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல விதமான சலுகைகளையும் அரசு வழங்கி வருவதால் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன் & விக்கி ஜோடி – வைரலாகும் பதிவு!
இந்நிலையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி சான்றிதழ் எதுவுமே தேவை இல்லை என்பதால் எளிதில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர முடியும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் இதுபோன்ற சலுகைகளை மாணவர்களுக்கு அரசு வழங்கலாம் என பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.