தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் தான் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி பள்ளிக்கல்வித்துறையால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இவர் இந்த அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர விரும்பும் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அத்துடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெற்று கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் PSLV-C53 ராக்கெட் – நாளை கவுண்ட் டவுன் துவக்கம்!
இதனை தொடர்ந்து பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன் கூடுதல் விவரங்களை பெற நினைப்பவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 04322-221584, 9486311243, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் 9443184841 உள்ளிட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.