தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – எமிஸ் இணையத்தில் பதிய உத்தரவு!
தமிழக்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 2021- 22ம் ஆண்டின் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. ஆனாலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழக மக்களுக்கு மின் வாரியம் முக்கிய அறிவிப்பு – நாளை மின்தடை!
முதலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த புதிய மாணவர் சேர்க்கையை அரசின் எமிஸ் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தினசரி மாணவர் சேர்க்கை விவரத்தை எமிஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து பள்ளிகளும் புதிய மாணவர் சேர்க்கையை உள்ளிடுவதை உறுதி செய்து சரிபார்த்து, பதிவில் எந்தவித குழப்பங்களும் இருக்கக் கூடாது. இருப்பின் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். பள்ளியிலிருந்து வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் விவரமும் எமிஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள் இதற்கு முன் வேறு எங்கும் படிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு எமிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.