தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2022 – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2022 - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2022 - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2022 – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து கோடை விடுமுறைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதனையடுத்து வகுப்பு வாரியாக தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய ஆண்டு இறுதித் தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு மே 30ம் தேதியுடன் தேர்வு முடியும்.

Exams Daily Mobile App Download

அடுத்தாக கோடை விடுமுறை அளிக்கப்படும். 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இந்த நிலையில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று அச்சம் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமானது. அதே போல் மாணவர் சேர்க்கையும் தாமதமாகவே நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஏராளமான பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய விதிகள் – அதிரடி அறிவிப்பு!

இதனால் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. நடப்பாண்டு கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 2022 – 2023ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!