கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பின்னி – உலக சாதனை பவுலிங்கிற்கு சொந்தக்காரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், முன்னாள் நட்சத்திர வீரருமான ஸ்டூவர்ட் பின்னி சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பின்னி ஓய்வு:
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் டெரன்ஸ் ரோஜர் பின்னி, கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட 37 வயதான ஸ்டூவர்ட் பின்னி, கடந்த 1983 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினராக இருந்த ராஜர் பின்னி என்பவரது மகனாவார்.
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி – செப்.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
பின்னி, ஒருநாள் போட்டியின் சிறந்த பந்துவீச்சில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையாளராக திகழ்ந்தவர். மேலும் வங்கதேசத்திற்கு எதிராக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். அதே நேரத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பின்னி தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்.
தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள பின்னி, இதுவரை இந்திய அணிக்காக 2014 முதல் 2016ம் ஆண்டு வரை, 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 T 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்களுடன் 3 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 230 ரன்களுடன் 20 விக்கெட்டுகளையும், T 20 தொடரில் 24 ரன்களுடன் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார். இவரது பந்து வீச்சு திறமையில் முக்கியமானது வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து, சுமார் 4.4 ஓவர்களில் 58 ரன்களுடன் அந்த அணியை சுருட்டியதாகும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஓய்வு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம், கர்நாடகா கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஸ்டூவர்ட் பின்னி, ‘கிரிக்கெட் விளையாட்டு எனது ரத்தத்தில் இருக்கிறது. என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட்டுக்கு நான் கண்டிப்பாக திரும்ப தருவேன். இதுவரை எனது விளையாட்டுக்கு ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்’ என குறிப்பிட்டுள்ளார்.