தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி நிலுவைத்தொகை? வலுக்கும் போராட்டம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விருதுநகர் மாவட்ட தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அகவிலைப்படி
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படி உயர்வு நாட்டில் ஏற்படும் பணவீக்கத்தை பொறுத்து கணக்கிடப்பட்டு 3% முதல் 6% வரை உயர்த்தப்படும். ஏனெனில் பணவீக்கம் ஏற்படும் போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை ஊழியர்கள் எதிர்கொள்வதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படி உயர்வு பெற்று உள்ளனர். அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல் – 4 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!
மேலும் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் விஜயபாலனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் கூறியதாவது, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதனால் அரசு இது தொடர்பாக விரைவில் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.