தமிழகத்தில் ஆக.9 வரை பலத்த காற்று புரட்டி போடும் – வானிலை எச்சரிக்கை!
பல மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து மாநில மக்களும் பெரும் அவதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடை காலத்தில் ஏற்பட்ட வெப்பச்சலனத்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தமிழக மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ஓயாது மழை பெய்த வண்ணமாக இருந்தது. தற்போது கோடை காலம் முடிந்த கையோடு தினமும் தவறாது மழை பொழிந்து சில மாநிலங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடும் கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு!
இவ்வாறு ஓயாது பெய்யும் தொடர் மழையால் அநேக மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே மொத்தமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் விடுக்கப்பட்ட சிவப்பு,ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட்டுகளால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை தொடர்ந்து தற்போது டெல்லியில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.