தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பிற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வருங்கால வைப்பு தொகை வழங்கப்படும். அதனை தொடர்ந்து மாதந்தோறும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2004 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் பல்வேறு புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது. அதன்படி இனி ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
TCS, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் WFH முறை? மற்ற நிறுவனங்களின் திட்டம் இது தான்!
மேலும் அவர்களின் பணி காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நடைமுறையில் உள்ள புதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பலரும் சில வருடங்களாக வேண்டி வரும் நிலையில் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.