தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – மே 26 இல் தர்ணா போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாளை (மே 26) தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2004ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பலரும் கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தனர். இந்த நிலையில் முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை நிறைவேற்றும் படி வலியுறுத்தினர். ஆனாலும் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இது குறித்த பரிசீலனைகளும் மட்டும் நடைபெற்று வருகிறது.
1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் கோடை விடுமுறை துவக்கம்!
இந்த நிலையில் ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. அதே போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசுக்கு உள்ள நிதி நெருக்கடியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை சாத்தியமில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ஈட்டிய விடுப்பு ஊதியத்தை பணப்பலனாக வழங்க வேண்டும். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியத்தின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து அவருக்கான ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜூன் மாதம் 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.