தமிழகத்தில் 4 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது? ஊழியர்கள் அகவிலைப்படி கோரி போராட்டம் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜூன் மாதம் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பிறகு இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற முதல் மானிய கோரிக்கை விவாதத்தின் போது 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை (மே 25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 7வது ஊதிய கமிஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகையில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இக்கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர், அகவிலைப்படி உயர்வு வழங்குவதை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 10ம் தேதி பணியாளர்களை ஒன்று திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், அதே போல ஜூன் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தேதிகளில் போராட்டம் நடைபெற இருப்பதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் கவலையடைந்துள்ளனர்.