தமிழகத்தில் ஜூலை 4 முதல் ஸ்டிரைக் – ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 4 முதல் ஸ்டிரைக் - ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 4 முதல் ஸ்டிரைக் - ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 4 முதல் ஸ்டிரைக் – ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவிப்பு!

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் 2014-ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து ஸ்டிரைக் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்டிரைக் அறிவிப்பு:

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியாகும் சரக்குகளை கையாள்வதற்காக அதிகமான பொதுத்துறை மற்றும் தனியார் சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுங்கத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த சரக்கு பெட்டக நிலையங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களை எடுத்து செல்வதில் லாரி உரிமையாளர்களுக்கும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்களுக்கும் வாடகை உயர்வு, ஒதுக்கீடு, குறித்த காலத்தில் வாடகை பணம் வழங்குவது உள்ளிட்டவைகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட வாடகை தற்போது வரை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணத்தை 80% உயர்த்தி வழங்கக் கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்கள் செல்லும் பணிகள் தீவிரமாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 17,092 பேருக்கு பாதிப்பு!

மேலும் கடந்த மார்ச் மாதம் திருவள்ளூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி வாடகை கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க கோரி லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்களுக்கான வாடகை கட்டணத்துடன் நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும் 30 சதவீதம் வாடகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இரும்பு உருக்கு ஆலைகளுக்கும் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிப்புக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!