TN TRB வெளியிட்ட முக்கிய உத்தரவு – ஆசிரியர்கள் அதிர்ச்சி, வலுக்கும் போராட்டம்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முக்கிய கோரிக்கை:
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா எதிரொலியாக அரசு சார்ந்த எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது நிலைமை சீராகி வருவதால் அரசு சார்ந்த போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் TN TRB மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 விமானங்கள் இயக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!
இந்த ஆசிரியர்களுக்கு 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாவட்டங்களில் பணி செய்ய ஆணை வழங்கப்படுவதால், அதிக சிரமம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பில் TN TRB க்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து ஆசிரியர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிலையில், பேசிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஆணை ஆசிரியர்களை அலைகழித்து தேர்வு பணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
மேலும் இந்த ஆணை அடிப்படையில் 12 மணி நேரத்திற்கு மேலாக தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து TN TRB யால் நடத்தப்படும் காணொளி கூட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்ணியக் குறைவான வார்த்தைகளை கூறி மிரட்டப்படுவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தை நடத்தப் போவதாக ஆசிரியர்கள் எச்சரித்தனர்.