அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் – போராட்டம் அறிவிப்பு!
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில், ஊழியர்களுக்கு சம்பளமும், ஒய்வு பெற்றவர்களுக்கான ஒய்வூதியமும் புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சட்டப்பேரவை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்:
நாடு முழுவதும் கொரோனா வருகைக்கு பின்னர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அதிகமாக பணவீக்கம் நிலவி வருகிறது. இதனால் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 1500 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களுக்கு நகராட்சி வசூல் செய்யும் வரியின் மூலமாக சம்பளம் மற்றும் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு வரி சலுகைகள் அளித்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு குறைவான வரி வசூல் ஆகிறது. இதன் காரணமாக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனால் ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதை காரணமாக வைத்து அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.அவர்கள் அரசுக்கு முன்பு வைத்த கோரிக்கை புதுச்சேரி மாநில நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, புதுச்சேரி அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஒய்வுதியம் வழங்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் ஒய்வூதியமும் புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 22 முதல் 24 வரை பள்ளி & அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளதை அரசே நேரடியாக வழங்கி வருகிறது. இந்த வகையில் தங்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் கட்டமாக பணிகளை புறக்கணித்து சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் கைகளில் பதாகைகள் வைத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர். இந்தியா முழுவதும் பணவீக்கம், விலைவாசி உயர்வு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் எங்களுக்கு குறைவான சம்பளம் கிடைத்தால் நாங்கள் எப்படி எங்கள் குடும்பத்தை பார்த்து கொள்ள முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.