தமிழகத்தில் கடுமையாகும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – சட்டத்துறை அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏகப்பட்ட குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ரம்மி தடை சட்டம்:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி பலர் கடன் பிரச்சனையால் தவித்து வருகின்றனர். மேலும் மாதந்தோறும் ஆன்லைன் ரம்மியால் தங்களது பணத்தை இழந்துவிட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க அரசு இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க விரைவில் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கிடையாது – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அதில் அவர் கூறுகையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என தெரிவித்த அவர், இந்திய அளவில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு சட்டமும் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்