ஜூலை 24 முதல் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல் – வங்கதேச அரசு!
வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
TNUSRB காவலர் PET தேர்வர்கள் கவனத்திற்கு – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
அதனால் அந்த மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நமது அண்டை நாடான வங்கதேசத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் வங்கதேச அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கை நாளை (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை காலை 8 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த முறை கொரோனா அலையின் போது அறிவித்த ஊரடங்கை விட இந்த முறை மிகவும் கண்டிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் எனவும் அதனை கண்காணிக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.